
அம்பகரத்தூர் மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் நடத்தப்படும் மதரசா வின் மேம்பாட்டுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். கமலக்கண்ணன் புதுவை அரசை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திங்கள்கிழமை காரைக்கால் வந்த முதல்வர் வி. வைத்திலிங்கம், மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்தை பள்ளிவாசல் ஜமாத்தார்களிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக