அகிலங்களை படைத்து பரிபக்குவப்படுதிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன். அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என் இணையதளதிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
சனி, 13 ஆகஸ்ட், 2011
அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி
துபாய் ஆகஸ்ட் 12 : அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி துபாயில் சத்வா கார்த்திகா உணவகத்தில் நடைபெற்றது இதில் சங்கத்தின் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சங்கத்தின் தலைவர் அன்சாரி அவர்கள் இந்த வருட ரமலான் மாதத்தின் பித்ரா வசூலிப்பது மற்றும் அதனை விநியோகிக்கும் முறை பற்றி விளக்கி தலைமை உரை ஆற்றினார்.
உறுப்பினர்கள் அனைவர்களும் அவர்களுடைய பித்ராவையும் அவர்கள் நண்பர்கள் தரும் பித்ராவையும் அவர்களுடைய பகுதி பொறுப்பு தாரர்களிடம் கொடுக்குமாறு சங்கத்தின் தலைவர் அன்சாரி அவர்கள் தெரிவித்தார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)