வெள்ளி, 31 டிசம்பர், 2010

25 காசுக்கு இனி மதிப்பில்லை

நாட்டின் பணவீக்கம் நாணயத்தையே செல்லாக் காசாக்கி விடுகிறது. 2011ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி முதல் 25 காசு மற்றும் அதன் கீழ் புழக்கத்தில் உள்ள 3 வகை நாணயங்கள் செல்லாது என அரசு அறிவித்துள்ளது.1 பைசா, 2 பைசா நாணயங்கள் ஒரு காலத்தில் இருந்தன. பின்னர் குறைந்தபட்ச நாணயமாக 10 பைசா இருந்தது. 10, 20 பைசா நாணயங்கள் வழக்கொழிந்த பின்னர் 25 பைசா நாணயம் குறைந்தபட்ச நாணயமாகப் புழக்கத்தில் இருந்து வந்தது. பொதுமக்களின் உபயோகத்தில் இது இல்லாமல் இருந்தாலும் அரசின் புழக்கத்தில் இருந்து வந்தது.ஜூன் 30ஆம் தேதிக்குப் பின் குறைந்த பட்ச செல்லத்தக்க நாணயம் 50 காசாக இருக்கும். நடைமுறையில் வரி மற்றும் பணம் செலுத்துதல் போன்றவற்றில் கடைசி செல்லத்தக்க பணம் 50 காசாக கருதப்படும். அல்லது அதை முழுமையாக்கி ஒரு ரூபாயாக கணக்கிடப்படும் என்று வியாழக் கிழமையன்று வெளியான மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.இதுபற்றிய முறையான அறிவிப்பை ரிசர்வ் வங்கியும் வெளியிடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: இந்நேரம்.காம்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும்: ஜெர்மன் அதிபர் மெர்கல்

பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும் இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நன்றி: இந்நேரம்.காம்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

நேரத்தை முறைப் படுத்துவோம்

நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்..
1. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multi tasking) சமீபகாலங்களில், பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!
2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your Priorities) ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக் கொள்ளுங்கள். உதார ணமாக, தீப்பற்றிக் கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!
3. உடற்பயிற்சி செய்யுங்கள் (Exercise) உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!
4. ‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘No’ with kindness) நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம் தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயர்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!
5. காலையில் சீக்கிரமாக எழ முயற்சியுங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குங்கள் டைரிக் குறிப்பு எழுத பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது! உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!
6. போதுமான அளவு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் (Get enough rest) ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணிநேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!
7. எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations) உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!
8. மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times) ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!
9. தேவையில்லாதபோது இணையம் / செல்பே சியை அணைத்துவிடுங்கள் (Unplug) இணையத்தை உலாவுவதிலும், செல் பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
10. செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking) ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.
நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக் கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்த கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளுங்கள். வெற்றி நமக்கே..!!
நன்றி: சமுதாய ஒற்றுமை மாத இதழ்

வியாழன், 23 டிசம்பர், 2010

ஆயுர்வேத மருத்துவம் : முஸ்லிம் சகோதரிகள் சாதனை!


கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையின் பி.எல்.வி., ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பஸ்னா, ஹஸ்னா. ஒரே வகுப்பில் படித்த இந்த இரட்டைச் சகோதரிகள் மொத்த மதிப்பெண் 1850-ல் 1308 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் முதலிடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர் சர்மா குறிப்பிடுகையில், ‘ஆயுர்வேத படிப்புக்கு சமஸ்கிருத அறிவு தேவை. இதனால் இந்த படிப்பை முஸ்லிம்கள் பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. ஆனால் இந்த சகோதரிகள் தைரியமாக படிப்பைத் தேர்வு செய்து, கடுமையான உழைப்பின் காரணமாக ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்’ என்றார்.
இவரது தந்தை ஹம்சா குறிப்பிடுகையில், “அல்லாஹ்வுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒன்றாகப் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, ஒரே வகுப்பில் படித்த என் மகள்கள், ஒரே மாதிரியாக கல்லூரியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். நான் 25 ஆண்டுகளாக அரபு நாட்டில் பணியாற்றி வருகிறேன். எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான். இவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகள் மக்களுக்கு தீங்கு இழைக்காதவை. அதிகப்படியாக முஸ்லிம் மாணவ / மாணவிகள் இதில் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்கு சமஸ்கிருதமும், உருதும் மிக மிக அவசியம்.
நன்றி: சமூகநீதி அறக்கட்டளை

புதன், 22 டிசம்பர், 2010

காஸ் தட்டுப்பாட்டை போக்கவேண்டும் அரசுக்கு தே.மு.தி.க., வலியுறுத்தல்

காரைக்கால் : காரைக்காலில் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைபோக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என தே.மு.தி.க., வலியுறுத்தி உள்ளது. காரைக்கால் தே.மு. தி.க., மாவட்ட செயலர் அசனா வெளியிட்டுள்ள அறிக்கை: காரைக்காலில் கடந்த பல நாட்காளாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. சமையல் எரிவாயு கேட்டு பதிவுசெய்து பல நாட்கள் ஆகியும், வீடுகளுக்குச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் சரி வர செயல்படுவதில்லை. எரி வாயு உற்பத்தி நிறுவனங்கள் தட்டுப்பாடுன்றி சிலிண்டர் வழங்கியும், காரைக்காலில் உள்ள தனியார் ஏஜென்சிகள் மக்களுக்கு காஸ் சிலிண்டரை வழங்காமல் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து காஸ் சிலிண் டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் தனியார் ஏஜென்சி முன் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்

திங்கள், 20 டிசம்பர், 2010

கத்தரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குக் கொண்ட பேராசிரியர் அப்துல்லா மற்றும் தமுமுக தலைவர் பங்குக் கொண்ட மாநாடு


அப்துல்லாஹ் பெரியார்தாசன் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் அய்.கியூ.அய்.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியா-கத்தார் இஸ்லாமிய பேரவையின் அழைப்பின் பேரில் கடந்த டிசம்பர் 16 முதல் கத்தாரில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக அய்.கியூ.அய்.சி.யின் சார்பாக பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களும், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வும் பங்குக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சி தோஹாவில் உள்ள சவூதி மர்கசில் டிசம்பர் 17 மாலை நடைபெற்றது.

புதன், 15 டிசம்பர், 2010

காரைக்காலில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமா?

காரைக்கால், டிச. 15: காரைக்காலில் தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி சுதந்திரம் அடைந்தது முதல் காரைக்காலில் ஒரு பொது மருத்துவமனைதான் உள்ளது. மேலும், தனியாருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றும் இயங்குகிறது. வேறெந்த மருத்துவ வளர்ச்சியும் இங்கு இல்லை.
600 படுக்கைகள் கொண்ட அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் இல்லை. குறிப்பாக, இதயக் கோளாறு, சிறுநீரகச் சிகிச்சை, விபத்துச் சிகிச்சை, தலைப் பகுதி சிகிச்சைக்கு நிபுணர்கள் இல்லை.
இதுபோன்ற சிகிச்சை பெற தஞ்சாவூர் அல்லது புதுவைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. மேலும், சிடி ஸ்கேன் இருந்தும், அதை இயக்க நிபுணர் இல்லாததால், நோயாளிகள் இந்த வசதியைப் பெற வெளியூருக்குச் செல்ல நேரிடுகிறது. அதேபோல, சிறுநீரக டயாலிஸிஸ் பிரிவு ஏற்பாடு செய்வதில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட காரைக்காலுக்கு இந்த மருத்துவ வசதிகள் போதாது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
இங்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைநிலை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, வாரம் ஒருநாள் சிறப்பு சிகிச்சைக்கான நிபுணர்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்தும் வெற்றிகரமாக இல்லை. கடந்த சில வாரங்களாக மருத்துவக் குழுக்கள் வருவது இல்லை.
அதோடு, அரசு சார்பில், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தும் பணியும் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாம்.
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களும் சிறப்பாகச் செயல்படவில்லை என்ற குறை மக்களிடையே நிலவுகிறது. பெரும்பாலான நிலையங்கள் மிகவும் பாழடைந்த நிலையிலும், ஒப்பந்த மருத்துவர்களுமே இங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், புதுச்சேரியில் சிறப்பான அரசு மருத்துவமனை, மகளிர், குழந்தைகள் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, 8-க்கும் அதிகமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.
இந்த நிலையில், காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில் 35 ஏக்கர் நிலத்தை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மருத்துவமனைக்காக கையகப்படுத்தி வைத்துள்ளது. இங்கு காஞ்சி ஜயேந்திரர் தமது அறக்கட்டளை சார்பில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க புதுவை அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், ஆனால், இதுகுறித்து முடிவெடுக்காமல் புதுவை அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.
புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பிராந்தியமாக உருவாக்க, நட்சத்திர ஹோட்டல் கட்ட முன்வருவோருக்கு சுற்றுலாத் துறை அதிகபட்சமாக ரூ.1 கோடி மானியம் வழங்குகிறது. இதேபோல, காரைக்காலில் மருத்துவமனை கட்ட முன்வருவோருக்கும் அரசு மானியம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் கூறியது: புதுவையில் மொத்தம் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 1000 மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவர்களில் உள்ளூரில் மருத்துவமனை கட்ட முன்வருவோருக்கு குறிப்பிட்ட அளவு மானியம் அளிக்கும் முடிவை அரசு எடுக்கலாம்.
காரைக்காலில் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வரும் நிலையில், எதிர்காலத்தில் மருத்துவ வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே, இதுகுறித்து விரைவான முடிவை புதுவை அரசு மேற்கொண்டால், காரைக்கால் மட்டுமல்லாது, அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பயன்பெறுவர் என்றார் அவர்.
சுகாதார வசதியில் காரைக்கால் தன்னிறைவு பெற, தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதும், மருத்துவமனை கட்ட நிறைவான மானிய உதவித் திட்டங்களை விரைவாக முடிவெடுத்து அரசு அறிவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

நன்றி: தினமணி

செவ்வாய், 14 டிசம்பர், 2010

இஸ்லாமிய குண நலன்கள்

1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:43.

3.இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத், மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4. பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவனாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)

திங்கள், 13 டிசம்பர், 2010

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்;

இந்தியாவைச்சேர்ந்த அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரம் தமிழர்கள் அரபகங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மூலம் இந்திய அரசிற்கு கணிசமான அந்நியச்செலவாணி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தாயகம் துறந்து வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களில் கவுரவமான பதவியில் இருப்பவர்கள் நீங்கலாக, மற்றவர்களில் பெரும்பாலோர் படும் இன்னல்களுக்கோ அளவில்லை.

வெளிநாட்டுப் பயணத்திற்காக போலி எஜெண்டுகளிடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் ஒருபுறம், அதையும் தாண்டி விமானம் ஏறி, வெளிநாட்டு மண்ணில் தடம் பதித்தவுடன், தாய்நாட்டில் போலி ஏஜெண்டுகள் கூறியபடி சலுகைகள் இன்றி வெறும் குறைவான சம்பளத்திற்கு அதிகநேரம் மாடாய் உழைத்து ஓடாய் தேயும் அவலநிலை. குறைவான ஊதியமும் மாதம் நிறைவானவுடன் வழங்காமல், பல மாதங்கள் பாக்கி வைத்து கழுத்தறுக்கும் கம்பெனிகளின் தொல்லை ஒருபுறம்; மறுபுறம் தாயகத்திலோ வட்டிக்கு பணம் தந்தவன் குடும்பத்தின் கழுத்தை நெருக்கும் அவலம் மறுபுறம். இவ்வாறு கம்பெனிகளில் ஏற்படும் இன்னல்களை எழுத்தால் வடித்து எம்பஸி எனப்படும் தூதரகம் சென்றாலோ, எடுத்தெறிந்து பேசும், ஏளனம் பேசும் அதிகாரிகள் சிலரின் கண்டுகொள்ளாமை. இதுபோக பணியாற்றும் நாட்டில் மரணம் சம்பவித்து விட்டாலோ, நஷ்டஈடு கிடைக்குதோ இல்லையோ, பாடி நாருவதற்கு முன் நாடுவந்து சேருமா என்பது கேள்விக்குறி. இத்தகைய வெளிநாட்டு கனவுலக வாழ்கையில் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஏராளமான இந்தியர்களின் நிலையை சீராக்கவே வெளியுறவுத்துறை என்ற ஒன்று உண்டு. ஆனால் அந்த வெளியுறவுத்துறை அமைச்சர் அவ்வப்போது சில நாடுகளுக்கு விசிட் அடித்து சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதோடு கரையேறிவிடுவார். அவர் கையெழுத்திட்ட தொழிலாளர் நலன் சார்ந்த விசயங்கள் அமுல்படுத்தப்படாமல் கரையான் அறித்ததை பாவம் அவர் எங்கே அறிவார்?இத்தகைய இன்னல்களுக்கு விடிவு தேவை என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசும் வெளிநாடுவாழ் தமது மாநில மக்களுக்காக தனி நலவாரியம் அமைத்து வரும் நிலையில், தமிழக அரசை நோக்கியும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை பலரால் பரவலாக வைக்கப்பட்டது.


அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, முதல்வர் களமாக தேர்ந்தெடுத்தது முஸ்லிம் லீக் மாநாடு என்பதில் ஒருவகை மகிழ்ச்சியே. ஏனெனில் தமிழர்களில் அதிகமாக வெளிநாட்டில் அவதியுறுவது முஸ்லிம்களே!

இப்போது முதல்வரின் அறிவிப்பை பார்ப்போம்;

''தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, ``அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்'' எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்'' ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது. என்று கூறியுள்ளார் முதல்வர்.


நலவாரியம் அமைப்பது மகிழ்ச்சிக்குரியது என்றபோதிலும் அந்த வாரியம் பெயரளவில் இல்லாமல் வீரியமாக செயல்படுவதில்தான் முதல்வரின் என்னமும் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்பதை முதல்வர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நன்றி: முகவை எக்ஸ்பிரஸ்

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது

உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.

தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.

அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.

அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

ஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்.

இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.

அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்.

சனி, 11 டிசம்பர், 2010

ஆஷூரா நோன்பு ஏன் ஏதற்கு?

வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

'إن عدّة الشُهور عند الله اثنا عشر شَهراً في كتاب الله يوم خلق السماوات و الأرض ........ '

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - (அல்குர்ஆன் 9:36)

எனவே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பது மனிதன் கண்டுபிடித்ததல்ல. இந்த உலகத்தை படைக்கும்போதே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பதை அல்லாஹ் வரையறுத்து விட்டான் என மேற்கூறிய திருமறை வசனம் திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல்மாதத்தில் (முஹர்ரம் 1432) நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த மாதத்தில்தான் ஆஷூரா என்றழைக்கப்படும் சிறப்பான நாள் ஒன்று உள்ளது. ஆம் அது முஹர்ரம் 10 வது நாளாகும். ஆனவக்காரன் பிர்ஆவ்னிடமிருந்து இறைத்தூதர் நபி மூஸா (அலை) அவர்களையும், அவர்களை பின்பற்றிய முஸ்லீம்களையும் அல்லாஹ் தன் வல்லமையால் காப்பாற்றிய நாள்தான் இந்த 10 வது நாள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபோது அங்குள்ள யூதர்கள் இந்த 10 வது நாளில் நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். இவ்வாறு நோன்பிருப்பதின் விசேஷம் என்ன என்பதை அறிய நபி (ஸல்) அவர்கள் யூதர்களைப் பார்த்து வினவினர். அதற்கு அந்த யூதர்களோ 'இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, பிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்ததாரையும் கடலில் முழ்கடிக்கச் செய்தான் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபி மூஸா (அலை) அன்று நோன்பிருந்தார்கள். எனவே நாங்களும் நோன்பிருக்கிறோம் என்றும் விடை பகர்ந்தார்கள்'.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், நபி மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் (முஸ்லிம்களாகிய)நாங்கள் தான் உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள். (இந்த சம்பவம் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டு ஸஹீஹூல் புஹாரி, மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.)

மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக, ஆஷூரா நாளுக்கு முந்தைய நாளான முஹர்ரம் 9 அன்றும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், 'இனிவரும் காலங்களில் நான் உயிரோடிந்தால் முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகய இரு தினங்கள் நான் நோன்பு வைப்பேன்' என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தனர்.(நூல் : புஹாரி, முஸ்லிம்) இருப்பினும் அவர்கள் அதே வருடத்தில் மரணமடைந்தனர்.

எனவே முஹர்ரம் 9,10 ஆகிய தினங்களில் நாம் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். இதை உறுதி படுத்துவதாக கீழ்க்காணும் நபிமொழி அமைந்துள்ளது.

ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப்பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.(அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரழி), நூல் : புஹாரி, முஸ்லிம்)

இந்த வருடத்தில் நோன்பு வைப்பதால் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. பாவங்கள் மன்னிக்கப்படுவதினால் மனிதன் சுத்தமாகிறான். பாவங்களற்ற மனிதன்தான் அல்லாஹ்வின் கிருபையால் சுவர்க்கம் செல்லமுடியும். இதைவிட பெரிய பலன் என்ன இருக்கிறது? எனவே சுன்னத்தான இந்த நோன்பை நோற்று, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுவனம் அடைய முயல்வோமாக!
நன்றி: ஒற்றுமை.நெட்

காரைக்காலில் அறிவியல் கண்காட்சி

காரைக்காலில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று துவங்கியது.காரைக்காலில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் துவக்கி வைத்தார். நகரமன்ற சேர்மன் பிரபாவதி, கவுன்சிலர் சத்தியராணி, முதன்மைக் கல்வி அதிகாரி (பொறுப்பு) மாரிமுத்து மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்ட அறிவியல் படைப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.

வியாழன், 9 டிசம்பர், 2010

சர்க்கரை நோய் மற்றும் தீய கொழுப்பை குறைக்கும் பிஸ்தா!

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இருதய நோய் தாக்குவதற்கான அபாயம் 4 மடங்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இருதய நோய் தலைநகராக இந்தியா உருவெடுத்து வருகிறது.நாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமை செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. உயர் கார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப் பொருளாக பிஸ்தாவைச் சாப்பிடும் போது, உடலுக்குள் கார்போஹைட்ரேட் கிரகிக்கப்படுவது குறைகிறது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10விடயங்களும் உங்களுக்காக...

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் .இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது.

பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த திகதியும் இடமும் :-

இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.

தாயின் கன்னிப் பெயர் :-

பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

விலாசம் :-

நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.

விடுமுறைகள் :-

உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது,உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.

வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :-

இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.

முறையற்ற படங்கள் :-

பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.

ஒப்புதல்கள் :-

இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது.

விளம்பரங்கள்:-

நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.

தொலைபேசி இலக்கம் :-

உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.

பிள்ளைகளின் பெயர்கள் :-

இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.

பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம் :-

பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.ஈமானுக்கு சோதனையான காலம் இது.விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும்,வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கமார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

முஸ்லிம் பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள்.

பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.சிந்திப்போம் செயல்படுவோம்.

நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)2:152.

ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்;எனக்கு மாறு செய்யாதீர்கள்

புதன், 8 டிசம்பர், 2010

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவது எப்படி?

கடவுச்சீட்டு! இந்தியாவில் மேதகு குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கும் ஓர் ஆவணமாக மட்டுமே செல்லுபடியாகும்.
அதீத முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்போர்ட் பெறுவது எப்படி? தேவையான தகவல்களைச் சொல்கிறார், மண்டல கடவுச்சீட்டு அலுவலர்(பொறுப்பு) தவ்லத் தமீம்.

* Ordinary, Official, Diplomatic, Jumbo என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படும்!


* பாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஆர்டினரி, தட்கல் ஆகியவை. இதில் எந்த வகையில் விண்ணப்பிப்பதாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்தப் படிவத்தை ‘பிரின்ட் – அவுட்’ எடுத்துக்கொள்ள வேண்டும். அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் ஒரு தேதியில் வந்து டோக்கன் எடுக்க வேண்டும். பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கவுன்ட்டர்களில் செக் இன் செய்ய வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் தங்கள் கைப்பட பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொண்டுவந்தால் அது ஏற்கப்பட மாட்டாது!


* அதே சென்னைக்கு வெளியே பிற ஊர்களில் இருப்பவர்கள் தங்கள் கைப்பட பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுகளிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் சென்டர்களிலோ சமர்ப்பிக்க வேண்டும். சில மெட்ரோ நகரங்களில் காவல் துறை நிலையங்களில் பாஸ்போர்ட் மையங்கள் இருக்கும். அங்கும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.


* தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற கட்டாயம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அரசாங்கம் அங்கீகரித்த ஏதேனும் மூன்று அடையாளச் சான்றிதழ் களைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த மூன்றில் ஒன்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும். பொதுவாக, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கலாம்.


* ஆர்டினரிக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழ், குடியுரிமை ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் தலா இரண்டு இணைக்க வேண்டும்.

* புதிய ஆர்டினரி பாஸ்போர்ட்டுக்கு 1,000, தட்கல் மூலம் என்றால் 2,500 கட்டணம்.


* ஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் 10 ஆண்டு களுக்குச் செல்லுபடி ஆகும். 10 ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க ஆர்டினரிக்கு 1,000 மற்றும் தட்கலுக்கு 500 கட்டணம்.


* பெயர், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சின்னச் சின்ன திருத்தங்கள் மேற்கொள்ளவும், பாஸ்போர்ட்டைப் புதுப் பித்துக்கொள்ளவும் ஆன் லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2ஐப் பயன்படுத்த வேண்டும்.


* பாஸ்போர்ட் தொலைந்துபோனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் ‘non traceable’ சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2,500 மற்றும் தட்கலுக்கு 5,000 கட்டணம்.
நன்றி:

செவ்வாய், 7 டிசம்பர், 2010

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பு உரிமை 2 ஆண்டுகள்

ஐக்கிய அரபு அமீரகம் ஜனவரி 2011 முதல், மூன்று ஆண்டுகளாக இருந்த குடியிருப்பு உரிமையை இரண்டு ஆண்டுகளாக குறைத்துள்ளது, அதுபோல தொழிலாளர் அடையாள அட்டையும் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு:

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ குணங்கள்


கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.
கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.
கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.
இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.
இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.
கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.
பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.
முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

டிசம்பர் 6 தமிழகம் முழுவதும் த. மு. மு.க. தொடர்முழக்க ஆர்பாட்டம்

சென்னை : பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என நீதிபதி லிபர்ஹான் கமிஷன் சுட்டிக் காட்டியுள்ள 68 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அலகாபாத் கோர்ட்டில் நடைபெறும் பாபர் மசூதி இடித்தவர்கள் மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்.பாபர் பள்ளிவாசல் சொத்து தொடர்பான அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில், விரைந்து நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று கொட்டும் மழையில் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசும் போது, "வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பாபர் மசூதியை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திங்கள், 6 டிசம்பர், 2010

உலகின் சிறந்த செய்தி ஒளிபரப்புக்கான விருதை அல் ஜஸீரா வென்றது


ஐக்கிய ராஜ்ஜியத்தில் தலைமையாக கொண்டு இயங்கும் சர்வதேசிய ஒளி மற்றும் ஒலிபரப்புக்கான சங்கம் 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருக்கின்றனர். இது உலகெங்கும் ஊடகத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருகிறது.

திரைப்படங்களுக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் போன்று விருது கொடுப்பதை போல ஊடக துறையில் செய்தி ஒளி, ஒலிபரப்பு துவங்கி பல்வேறு துறைகளில் தரமானவைகளுக்கு விருது அளித்து வருகிறது. இந்த பட்டியலை உலகெங்கும் உள்ள பல்வேறு முன்னணி ஊடகங்களின் முக்கியமானர்கள் இதில் நடுவர்களாக கலந்துகொண்டு இதை சேர்வு செய்து உள்ளனர். இந்தியவை சார்ந்த என்.டி.டி.வி புகழ் ஜெய் சவ்ஹானும் இந்த நடுவர் குழுவில் உள்ளார்.

சர்வதேசிய அளவில் சிறந்த ஊடக துறைக்கான இந்த ஆண்டின் (2010 ) விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சம் மூன்று பரிந்துரைகள் சேர்வு செய்யப்பட்டது, அதில் ஒன்றிற்கு சிறந்தவைகான விருது வழங்கப்பட்டது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஆன்மிக சிந்தனைகள் » விவேகானந்தர்

* வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும், இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்.
* நம்புங்கள். இறைவனின் கட்டளை வந்துவிட்டது. பாமரமக்களும், எளியவர்களும் நலம் பெற வேண்டும் உழைத்திடுங்கள். இறைவனின் கையில் நீங்கள் ஒருகருவி என்ற உணர்வுடன் பிறருக்கு சேவை செய்யுங்கள்.
* உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.
* இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது.
* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.
* உலகவாழ்வுக்குள் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் அடையாளத்தினை விட்டுச் செல்லுங்கள். எழுந்திருங்கள், உழையுங்கள். இல்லாவிட்டால் நாம் பூமியில் பிறந்ததில் ஒருபயனும் இல்லை.
- விவேகானந்தர்

கடவுள் நம்பிக்கை எதற்காக!
* மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.

* முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.

* வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.

* ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.

* கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.

* கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.

-விவேகானந்தர்

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் கூறியுள்ளார். சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும் இணைந்து மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரையின் அழகிய புகைப்படங்கள்






























அரபு அமீரகத்தில் தேசிய தின கொண்டாட்டம்


அமீரகத்தின் 39 வது தேசிய தினம் டிசெம்பர் ௦௦02ம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத் தலை நகர் அபுதாபி, துபாய், ஷார்ஜாஹ், அஜ்மான், உம்முள் குவைன், ராசல் கைமா, புஜைராஹ், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்புற கொண்டாடப்பட்டது.

அமீரகத்தின் பல்வேறு நினைவலைகளை விவரிக்கும் வண்ணம் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அமீரகத்தின் தேசிய தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால், பூங்காக்கள் அனைத்தும் பல்வேறு நாட்டவர்களால் நிரம்பி வழிந்தன