செவ்வாய், 7 டிசம்பர், 2010

டிசம்பர் 6 தமிழகம் முழுவதும் த. மு. மு.க. தொடர்முழக்க ஆர்பாட்டம்

சென்னை : பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என நீதிபதி லிபர்ஹான் கமிஷன் சுட்டிக் காட்டியுள்ள 68 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அலகாபாத் கோர்ட்டில் நடைபெறும் பாபர் மசூதி இடித்தவர்கள் மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்.பாபர் பள்ளிவாசல் சொத்து தொடர்பான அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில், விரைந்து நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று கொட்டும் மழையில் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசும் போது, "வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பாபர் மசூதியை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக