சனி, 11 டிசம்பர், 2010

காரைக்காலில் அறிவியல் கண்காட்சி

காரைக்காலில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று துவங்கியது.காரைக்காலில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் துவக்கி வைத்தார். நகரமன்ற சேர்மன் பிரபாவதி, கவுன்சிலர் சத்தியராணி, முதன்மைக் கல்வி அதிகாரி (பொறுப்பு) மாரிமுத்து மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்ட அறிவியல் படைப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக