வியாழன், 23 டிசம்பர், 2010

ஆயுர்வேத மருத்துவம் : முஸ்லிம் சகோதரிகள் சாதனை!


கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையின் பி.எல்.வி., ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பஸ்னா, ஹஸ்னா. ஒரே வகுப்பில் படித்த இந்த இரட்டைச் சகோதரிகள் மொத்த மதிப்பெண் 1850-ல் 1308 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் முதலிடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர் சர்மா குறிப்பிடுகையில், ‘ஆயுர்வேத படிப்புக்கு சமஸ்கிருத அறிவு தேவை. இதனால் இந்த படிப்பை முஸ்லிம்கள் பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. ஆனால் இந்த சகோதரிகள் தைரியமாக படிப்பைத் தேர்வு செய்து, கடுமையான உழைப்பின் காரணமாக ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்’ என்றார்.
இவரது தந்தை ஹம்சா குறிப்பிடுகையில், “அல்லாஹ்வுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒன்றாகப் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, ஒரே வகுப்பில் படித்த என் மகள்கள், ஒரே மாதிரியாக கல்லூரியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். நான் 25 ஆண்டுகளாக அரபு நாட்டில் பணியாற்றி வருகிறேன். எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான். இவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகள் மக்களுக்கு தீங்கு இழைக்காதவை. அதிகப்படியாக முஸ்லிம் மாணவ / மாணவிகள் இதில் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்கு சமஸ்கிருதமும், உருதும் மிக மிக அவசியம்.
நன்றி: சமூகநீதி அறக்கட்டளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக