இதற்கு முன்னர் ஏ டி எம் (ATM - Automated Teller Machine) இல் பணம் எடுக்கவேண்டும் என்றால் அருகில் உள்ள திருநள்ளார் அல்லது காரைக்கால் சென்றுதான் பணம் எடுக்க வேண்டும். இப்பொழுது லக்ஷ்மி விலாஸ் பேங்க் இந்த சேவையை வழங்கி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் பயன் அடைந்து இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அகிலங்களை படைத்து பரிபக்குவப்படுதிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன். அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என் இணையதளதிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
அம்பகரத்தூரில் ஏ டி எம்
அம்பகரத்தூரில் ஏ டி எம் (ATM - Automated Teller Machine) கடந்த வெள்ளிக்கிழமை (18/02/2011) அன்று திறக்கப்பட்டுள்ளது . இந்த சேவையை லக்ஷ்மி விலாஸ் பேங்க் வழங்கி உள்ளது. அம்பகரத்தூர் பொது மக்களால் மிக நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்க பட்ட இந்த சேவை துவங்கி உள்ளதால் அம்பகரத்தூர் மக்கள் மட்டுமல்லாமல் அம்பகரத்தூர் ஐ சுற்றயுள்ள கிராமங்களான கொல்லாபுரம், கந்தன்குடி, சேத்தூர், நல்லம்பல், போன்ற ஊர்களின் மக்கள் பெறும் பயன் அடைந்துள்ளனர்.
சனி, 5 பிப்ரவரி, 2011
அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய நான்காவது பொதுக்கூட்டம்
துபாய்: பிப்ரவரி 04: அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய நான்காவது பொதுக்கூட்டம் துபாயில் சத்வா கார்த்திகா உணவக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவர் முஹம்மது அன்சாரி அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார், கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. அம்பகரதூரில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமண உதவி, முதியோர்களுக்கு முதியோர் உதவி, கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவி செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
2. அமீரகத்தில் வாழும் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர்கள் ஹஜ் மைதீன், மகபூப் அலி, இருவரும் இதுவரை வசூல் செய்யப்பட்ட சந்தா நிலவரத்தையும், கடந்த ஆண்டு பித்ரா விநியோகம் செய்த கணக்குகளையும் சமர்ப்பித்தனர்.
புதியதாக பொறுப்பாளர்கள் நியமனம்
துணை தலைவராக சர்புதீன் அவர்களையும், துணை செயலாளராக ஷாஹுல் அவர்களையும் புதிய கூடுதல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்தனர்.
கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடுத்த கூட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தலைவர் முஹம்மது அன்சாரி அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார், கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. அம்பகரதூரில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமண உதவி, முதியோர்களுக்கு முதியோர் உதவி, கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவி செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
2. அமீரகத்தில் வாழும் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர்கள் ஹஜ் மைதீன், மகபூப் அலி, இருவரும் இதுவரை வசூல் செய்யப்பட்ட சந்தா நிலவரத்தையும், கடந்த ஆண்டு பித்ரா விநியோகம் செய்த கணக்குகளையும் சமர்ப்பித்தனர்.
புதியதாக பொறுப்பாளர்கள் நியமனம்
துணை தலைவராக சர்புதீன் அவர்களையும், துணை செயலாளராக ஷாஹுல் அவர்களையும் புதிய கூடுதல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்தனர்.
கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடுத்த கூட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)