ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அம்பகரத்தூரில் ஏ டி எம்

அம்பகரத்தூரில் ஏ டி எம் (ATM - Automated Teller Machine) கடந்த வெள்ளிக்கிழமை (18/02/2011) அன்று திறக்கப்பட்டுள்ளது . இந்த சேவையை லக்ஷ்மி விலாஸ் பேங்க் வழங்கி உள்ளது. அம்பகரத்தூர் பொது மக்களால் மிக நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்க பட்ட இந்த சேவை துவங்கி உள்ளதால் அம்பகரத்தூர் மக்கள் மட்டுமல்லாமல் அம்பகரத்தூர் ஐ சுற்றயுள்ள கிராமங்களான கொல்லாபுரம், கந்தன்குடி, சேத்தூர், நல்லம்பல், போன்ற ஊர்களின் மக்கள் பெறும் பயன் அடைந்துள்ளனர்.

இதற்கு முன்னர் ஏ டி எம் (ATM - Automated Teller Machine) இல் பணம் எடுக்கவேண்டும் என்றால் அருகில் உள்ள திருநள்ளார் அல்லது காரைக்கால் சென்றுதான் பணம் எடுக்க வேண்டும். இப்பொழுது லக்ஷ்மி விலாஸ் பேங்க் இந்த சேவையை வழங்கி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் பயன் அடைந்து இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக