சனி, 12 ஜனவரி, 2013

உலகில் அதிக மக்கள் பரவலாக பேசக்கூடிய மொழிகளில் முதல் 10 இடத்தில இருப்பது.

உலகில் அதிக  மக்கள் பரவலாக பேசக்கூடிய மொழிகளில் முதல் 10 இடத்தில இருப்பது.


10. பஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் மக்களும் இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

9. ஜப்பானிய மொழி ஜப்பானிய மற்றும் ஜப்பானிலிருந்து குடிபெயர்ந்த 130 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். ஜப்பானிய மொழியில் இது நிஹோங்கோ என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பாக ஜப்பானில் மட்டுமே பேசப்பட்டு வருகின்ற போதும், ஜப்பானிலிருந்து இடம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இம்மொழியைப் பேசி வருகின்றனர்.
இம்மொழி ஜப்பானிய சமூக ஏற்ற தாழ்வுகளை குறிப்பதற்கு ஏதுவாக சிக்கலான மரியாதைச் சொற்களுடன் அமைந்த, தமிழைப் போன்ற ஒரு ஒட்டுச்சேர்க்கை மொழியாகும். வினைச்சொற்களும் சில குறிப்பிட்ட மொழிக்கூறுகளும், பேசுபவர், கேட்பவர் மற்றும் உரையாடலில் இடம்பெறுபவரின் சமூக உயர்வு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியின் மொத்த ஒலிகள் குறைவாக இருப்பினும் தனக்கே உரித்தான வட்டார ஓசை நயத்தைக் (pitch accent) கொண்டுள்ளது. இம்மொழியின் பூர்வீகம் பெரும்பாலும், 8ம் நூற்றாண்டில் பழங்காலத்து ஜப்பானிய மொழியில் இயற்றப்பட்ட மூன்று முக்கிய நூல்தொகுப்புகளால் அறியப்படுகிறது. ஆனால் சிறிய அளவில், இதற்கு முந்தைய காலகட்டங்களிள் இயற்றப்பட்ட செதுக்கள்களும் கிடைத்துள்ளன.

இம்மொழி மூன்று வகையான வரி வடிவங்களை கொண்டது. சீன வரிவடிவான காஞ்சி (漢字), மற்றும் சீன எழுத்துகளில் இருந்து உருவாகிய ஹிரகனா (平仮名) மற்றும் கதகான (片仮名). ஆங்கில மற்றும் வெளிநாட்டினரின் வார்த்தைகளை உச்சரிக்கவும், நிறுவன பெயர் அமைக்க, விளம்பரப்படுத்த மற்றும் கணினியில் எழுத்துக்களை உள்ளிடவும் ரோமாஜி(ローマ字) பயன் படுத்தப்படுகிறது. ,சீன, ஜப்பானிய எண்களைப் பயன்படுத்தினாலும் மேற்கத்திய அரேபிய எண்களும் பரவலாக பயன்படுகின்றன.

இம்மொழியில் அயல் மொழிகளிலிருந்து பெறப்பட்ட கடன் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாகக் கடந்த 1500 வருடங்களில் சீன மொழியில் இருந்து அதிகம் பெறப்பட்டுள்ளது அல்லது சீன மொழியை அடிப்படையாக கொண்டு சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 19ம் நுற்றாண்டுப் பிற்பகுதியில் இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து, முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து, கணிசமான வார்த்தைகள் பெறப்பட்டுள்ளன. 16 & 17 ம் நுற்றாண்டு போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டினருடனான வியாபாரத் தொடர்புகளால் இவ்விரண்டு மொழிகளின்ன் தாக்கமும் அதிகமாகவே உணரப்படுகிறது


8.உருசிய மொழி (Russian language, русский язык, ருஸ்க்கி இசிக்) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலருஸ் போன்ற நாடுகளின் அதிகாரபூர்வ மொழி. 1917 வரை உருசியப் பேரரசின் ஒரே அதிகாரபூர்வ மொழியாக இருந்தது.



7. வங்காள மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 232 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியதாகும்.
இந்த மொழியின் பூர்வீகப் பகுதி தெற்காசியாவின் கிழக்குப் பகுதியான வங்காள தேசமாகும். இந்த வங்காள தேசத்தினுள் தற்போதைய பங்களாதேஷ், இந்தியாவின் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த மொழியை 230 மில்லியன் மக்கள் பேசுவதுடன் இந்த மொழி உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும் (உலகில் ஐந்தாம் அல்லது ஆறாம் இடத்தில் உள்ளது). இது இந்தியாவில் இரண்டாவது அதிகமாகப் பேசப்படும் மொழியாகும்.
வங்காள மொழியானது நீண்டதும், பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. 1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது வங்காள மொழியின் தனித்துவத்தை நிலைநிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விழைவாக பெப்ரவாரி 21 ல் பல வங்காள தேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த தினம் தற்போது சர்வதேச தாய்மொழி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


6. போர்த்துக்கீச மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. லத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. லத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. அங்கோலா, போர்த்துக்கல், பிரேசில் போன்ற நாடுகளின் ஆட்சி மொழி.



5. அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. உலகில் ஏறத்தாழ 250-300 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். அறமைக் மொழி, ஹீப்ரு மொழி என்பவற்றுடன் தொடர்புபட்டது. அரபு உலகம் முழுவதிலும் பேசப்படுகிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது.



4. இந்தி அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று [5].
இந்தியாவின் 22[6] தேசிய மொழிகளுள், இந்தியும் ஒன்றாகும். இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவன்அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.[7]. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பேசப்படும் சமசுகிருதம் கலந்த இந்தியைவிட, மும்பையில் பேசப்படும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமுள்ள இந்தியே பரவலாக ஊடகங்களால் பரப்பப்படுகிறது .


இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா , உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.



3. ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது. பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளில் இம்மொழி பரவலாகப் பேசப்படுகிறது. சீனம், எசுப்பானியம்(ஸ்பானிஷ்), இந்தி ஆகிய மொழிகளுக்குப் பின் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம். 380 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் ஆங்கிலம் பேசப்படுகின்றது. அது மட்டுமல்லாது, உலகின் அதிகளவானோரால் கற்கப்படும் 2வது மொழியாகவும் உள்ளது. அமெரிக்க, பிரித்தானிய நாடுகளின் உலகளாவியரீதியான செல்வாக்காலும், மருத்துவம், அறிவியல், திரைத்துறை, இராணுவ, விமான, கணினி போன்ற முக்கிய துறைகளில் ஆங்கிலமொழி பேசுவோரின் ஆதிக்கம் காரண்மாகவும் ஏனைய மொழிகளைவிட ஆங்கிலம் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. உலகின் அதிகபட்ச நாடுகளை ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிகளாக ஆட்சி புரிந்ததால் ஆங்கிலம் ஒரு உலக மொழி ஆகிவிட்டது.

2. எசுப்பானிய மொழி (Español) அல்லது எசுப்பொன்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.


எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[2][3]. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாம்மிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது


1. சீன மொழி: சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி.
பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கிறது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.


18. தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[3], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[4]
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.[5] திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [6] மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.









புதன், 9 ஜனவரி, 2013

உலகில் சொகுசாக வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரங்களில் முதல் 10 இடங்களில் இருக்கும் நகரங்கள்.

உலகில் சொகுசாக வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரங்களில் 2012 இன் கணக்கெடுப்பு பிரகாரம் டோக்யோ (ஜப்பான்) நகரம் முதலிடம் பெற்றுள்ளது, ஆறாவது இடத்தை ஜுரிச் மற்றும் சிங்கப்பூர்  இரண்டு நகரங்கள் பங்குபோட்டுள்ளன.

 முதல் 10 இடங்களில் ஜப்பான் 3 இடங்கள் பிடித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின்படி இந்தியாவின் டெல்லி 113 ஆவது இடமும் மும்பை நகரம் 114 ஆவது இடமும் பெற்றுள்ளது,

முதல் 10 இடங்களில் இருக்கும் நகரங்கள்:

1. டோக்யோ (ஜப்பான்)
2. லுவாண்டோ (அங்கோலா)
3. ஒசாகா (ஜப்பான்)
4. மாஸ்கோவ் (ரஷ்யா)
5. ஜெனிவா (சுவிட்சர்லாந்து)
6. ஜுரிச் (சுவிட்சர்லாந்து)
6. சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
8. ந்ஜமேனா (சாட்)
9. ஹாங்காங் (ஹாங்காங்)
10. நகோய (ஜப்பான்)

திங்கள், 7 ஜனவரி, 2013

முறைகேடான பாலியல் உறவு முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு! – ஆய்வில் தகவல்!

நியூயார்க்:குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.
முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுவதையொட்டி சமூகத்தில் திருமணத்திற்கு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகளும் குறைந்து வருகின்றன. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள் யூதர்களில் 94 சதவீதமாகும். கிறிஸ்தவர்களில் 79 சதவீதம் காணப்படுகிறது. புத்தர்களில் 65 சதவீதம். ஹிந்துக்களில் 13 சதவீதம் காணப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் முறைகேடான பாலியல் உறவுகள் யூதர்களிடம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்களிடம் 3 சதவீதமும், ஹிந்து, பெளத்த, முஸ்லிம்களிடம் ஒரு சதவீதமாகவும் உள்ளது.
இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.
சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான மனவளவாளர்(கவுன்சலர்) ஆவார். இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.
 
நன்றி: தூதுஆன்லைன்
 

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பாலியல் வன்முறைகளை தடுக்க பள்ளி மாணவிகளை கோட் அணியச் சொல்லும் புதுவை அரசு

புதுவையில் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றது.
இதை அடுத்து இதுபோல சம்பவங்கள் நிகழாவண்ணம் தடுக்க சில அதிரடி நடவடிக்கைகளை துரிதப் படுத்தியுள்ளதாக புதுவை அரசு தெரிவித்துள்ளது.

புதுவையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு மாணவி உயிரிழந்த பின்னர், டெல்லி மாணவியின் சம்பவத்துக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் போல, புதுவையிலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்களா நடைபெற்றது.

இதை அடுத்து புதுவை அரசின் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், கல்வி அதிகாரிகள் கூடி, இதுபோன்ற வன்கொடுமைகள் நடக்காவண்ணம் மாணவிகளைப் பாதுகாப்பது எப்படி என்று ஆலோசனை மேற்கொண்டது.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் மாணவிகளுக்கு தனிப் பேருந்து இயக்குவது என்றும், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், அதோடு மாணவிகளின் சீருடைக்கு மேல் கோட் அணிய வேண்டும் என்றும் யோசனைகள் கூறப்பட்டுள்ளன.

இந்த யோசனைகளை புதுவை அரசு ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவும் முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின்னர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் புதுவை அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாணவிகள் கோர்ட் அணிவதால் பாலியல் வன்முறைகள் குறையப்போவதில்லை. வெப்ப சூழ்நிலையில் கோர்ட்டுடன் பயணிப்பது சுகாதார கேட்டை உருவாக்கிவிடும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்கிற பெயரில் பெண்களின் சம உரிமைகளை தட்டிப் பறிக்கும் செயலாகவே புதுவை அரசின் இந்த செயல்பாடுகள் இருக்கின்றன என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டி உள்ளன.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கபடுவது அதிகமாகி கொண்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்படும் தருணம் மட்டும் நம்முடைய மீடியாக்கள் அதனை பரபரப்பாக பேசுகின்றன, நாமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில் தவறில்லை மாறாக நாம் இதனை எவ்வாறு தடுப்பது இது ஏன் இப்பொழுது அதிகமாகி வருகிறது என்பதனை சிந்திக்க வேண்டும்.
 
பெண்கள் மற்றும் குழந்தைகள் எந்தெந்த நிலைகளில் பாலியல் பலாத்காரத்தில் பாதிப்படைகிறார்கள் என்பதனை ஆராய வேண்டும்.
 
கலவரங்கள்: குறிப்பாக நம் நாட்டில் எந்தப்பகுதிகளில் கலவரம் ஏற்படுகிறதோ அந்தப்பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாலியல் பலாத்காரத்தில் பாதிப்படைகிறார்கள், குறிப்பாக நம் நாட்டில் குஜராத், காஷ்மீர், ஒரிசா மற்றும் அஸ்ஸாம் போன்ற பகுதிகளிலும் நம் அண்டை நாடான இலங்கையிலும் பாலியல் பலாத்காரம் சில சமூகங்கள் மீது ஏற்படுத்தபடுகிறது.
இவ்வாறு கலவரங்களில் ஏற்படும் பாலியல் பலாத்காரத்தை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும், இது போன்ற நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  உரிய பாதுகாப்பை உரிய அரசாங்கம் செய்துதரவேண்டும். பெண்கள் இதுபோன்ற தருணங்களில் எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்வது போன்ற பயிற்சிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி கொடுக்கவேண்டும்.
 
சமூகங்கள்:   நம் சமூகம் பெண்களை காட்சிபொருளாகவும், காமபொருளாகவுமே பார்கின்றன, குழந்தைகளுக்கு பள்ளிபருவத்தில் தன்னம்பிக்கையும் தைரியமும், ஊட்டி வளர்க்கவேண்டும், அந்நிய ஆடவர்களிடம் எவ்வாறு நடந்துக்கொள்வது, அநாகரிகமான தொடுதல்களுக்கு எவ்வாறு எதிர்புதெரிவிக்க வேண்டும் என்று சொல்லிதருதல் வேண்டும், நம் கண் எதிரில் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ பாதிப்பு ஏற்படும்போது நாம் உடனே காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும்,
 
பெண்கள் தனக்கு ஏற்படும் கேளிக்கைகளை தன் பெற்றோரிடம் கூறவே பயப்படுகிறார்கள் காரணம் பெற்றோர்கள் தங்கள் மீது குற்றம் இருப்பதாகவே பேசுகின்றன சில பெற்றோர்கள் உடனே பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதை நிறுத்த செய்கின்றன இதனால் தனக்கு ஏற்படும் இன்னல்களை பெண்கள் மறைக்கநினைக்கின்றன.
 
கவர்ச்சி: பெண்களை நம் ஊடகங்களும் சமூகமும் கவர்ச்சி பொருளாகவே சித்தரிக்கின்றன, இன்றைய காலகட்டத்தில் கவர்ச்சி கட்டயமாகபட்டுள்ளது, சினிமா மற்றும் சின்னத்திரைகளில் பெண்களை கவர்ச்சியாகவே காட்டவிரும்புகின்றன, விளம்பரங்களிலும் பெண்களை கவர்ச்சியாகவே காட்டுகின்றன.
 
ஊடகங்கள்:
சினிமாக்களில் மற்றும் சின்னத்திரைகளில் தனியாக செல்லும் பெண்களை பலாத்காரம் செய்வது போன்றும் பின்பு ஒருவர் நான்கு ஐந்து பேரை அடித்து அப்பெண்ணை காப்பாற்றுவது போன்றும் காட்டுகின்றான் நிஜ வாழ்கையில் இவ்வாறு ஒருவர் ஐந்து நபர்களிடமிருந்து காப்பற்றமுடியுமா, பெண்களை பலாத்காரம் செய்வது போன்றும் காட்டுகின்றன, இதுபோன்றவைகளை பார்க்கும்போது அவனும் அதுபோன்று செய்ய ஊந்தப்படுகின்றான், இதுபோன்ற காட்சிகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். 
 

ஆடைகள்: இந்த நாகரிக உலகத்தில் பெண்கள் நாகரீகமாக உடை உடுத்த விரும்புகின்றனர், ஆனால் சில பெண்கள் நாகரிகமான உடை என்று அநாகரிகமான உடை அணிகின்றனர் உதாரணமாக குட்டை பாவாடை, லோ ஹிப்  பேன்ட், இதனால் இவர்களுக்கும் பாதிப்பு இவர்களால் மற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு.

சிலர் கவர்ச்சியாக உடை அணியும்போது மற்றவர்களுக்கு எவ்வாறு பாதிப்பு  என்றாள், ஒருவன் ஒரு பெண்ணை கவர்ச்சியான உடையில் காணும்போது காமவெறிக்கு உள்ளாகி அதனை தீர்த்துக்கொள்ள அவனுடைய வெறியை மற்ற பெண்களிடமும் குழந்தைகளிடமும் காட்டுகின்றான், ஆகையால் ஆடையில் நாகரீகம் தேவை அநாகரிகம் கூடாது.

சுதந்திரம்: நம் தேசத்தந்தை காந்தியடிகள் எப்பொழுது ஒரு பெண் நகைகள் அணிந்துக்கொண்டு சுதந்திரமாக இரவில் தனியாக  செல்லமுடிகிறதோ அப்பொழுதுதான் நாம் உண்மையான சுதந்திரம் அடைந்ததாக பொருள் என்றார், ஆனால் இப்பொழுது ஒரு பெண் பகலில் நகைகள் அணியாமல்கூட செல்ல முடியவில்லை. இந்நிலை மாறவேண்டும் என்றால் தண்டனை கடுமயக்கப்படவேண்டும்.
 
 
(குறிப்பு: இது என்னுடைய கருத்து இதில் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும் நான் திருத்திகொள்கிறேன்.)