புதன், 26 ஜனவரி, 2011

சி.ஏ. படிப்பில் சேர தேர்வான மாணவிக்குப் பாராட்டு

காரைக்கால், ஜன. 22: காரைக்காலில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, சி.ஏ. படிப்புக்கு தேர்வான மாணவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

சிஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் காரைக்காலை சேர்ந்தவர்களும், ஏழை மாணவர்களும் பயிற்சி பெற வசதியாக காரைக்கால் அஞ்சுமன் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் நேரடியாக சிஏ படிப்பில் சேரும் வகையில் நடத்தப்படும் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

இப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்களில் காரைக்கால் புதுத்துறை கிராமத்தைச் சேரந்த ஹாஜா மெய்னுதீன் மகள் பௌஜியா சி.ஏ. படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா அஞ்சுமன் இஸ்லாமிய சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்காலை சேர்ந்த அனைத்து சமுதாய மாணவர்களும் பயன் பெறும் வகையில் இலவசமாக இப் பயிற்சியை நடத்துவதாகவும், மாவட்டத்தில் முதல் முறையாக இப்படிப்பில் சேர தேர்வான மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. சுல்தான் அப்துல் காதர் உள்ளிட்டோர் தெரிவித்தனர். மேலும், பயிற்சி வகுப்புகளை நடத்திய பேராசிரியர் எம்.ஐ. லியாகத்அலி, வழக்குரைஞர் எஸ்.எம். ஹபீபு முகம்மது, ஆடிட்டர்கள் சிதம்பரநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக