அகிலங்களை படைத்து பரிபக்குவப்படுதிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன். அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என் இணையதளதிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
ஞாயிறு, 27 மார்ச், 2011
காரைக்காலில் காங்., - என்.ஆர். காங்., மோதல்முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட 7 பேர் காயம்
காரைக்கால்:காரைக்காலில் காங்., - என்.ஆர். கட்சியினர் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். போலீசார் தடியடி தடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். திருநள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ., சிவா உள்ளிட்ட ஏழு பேர் காயமடைந்தனர்.காரைக்கால் திருநள்ளார் தொகுதியில் கடந்த முறை ம.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.சிவா, காங்., முன்னாள் அமைச்சர் கமலக்கண்னை தோற்கடித்து வெற்றி பெற்றார். இம்முறை ம.தி.மு.க., தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்ததால், கட்சி மாறிய பி.ஆர்.சிவா என்.ஆர்.காங்., சார்பில் திருநள்ளார் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். காங்., சார்பில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் போட்டியிடுகிறார். திருநள்ளார் தொகுதியில் காங்., மற்றும் என்.ஆர்.காங்., தேர்தலில் நேருக்கு நேர் களம் இறங்கியுள்ளன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருமண நிகழ்ச்சிக்காக அம்பகரத்தூர் சென்ற பி.ஆர்.சிவா இரவு அப்பகுதியில் இருந்த தொண்டர்களை சந்தித்தார்.அங்கு வந்த கமலக்கண்ணன் ஆதரவாளர்கள் இரவு 11 மணிக்குமேல் ஏன் பிரசாரம் செய்கிறீர்கள், பணம் பட்டுவாடா செய்யக்கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினரும் நள்ளிரவு 12 மணியளவில் செல்லூர் தனியார் சோப்பு கம்பெனி எதிரே தாக்கி கொண்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவா காயமடைந்தார். அவருடன் சென்ற டிரைவர் கிருஷ்ணன், தீபன், ரமேஷ் உட்பட ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டது.தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவா தரப்பினர் திருநள்ளார் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தடியடியால் ஆவேசமடைந்த சிவா தரப்பினர் போலீசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசு பேச்சுவார்த்தை நடத்தினார்.தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து சிவா தரப்பினர் கலைந்து சென்றனர். முன்னாள் எம்.எல்.ஏ., சிவா தாக்கப்பட்ட தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் சிலர் நல்லம்பல் சென்று கமலக்கண்ணன் ஆதரவாளர்களான இளைஞர் காங்., துணைத் தலைவர் பிரபுவின் அம்பாசிட்டர் கார், சேத்தூர் இளைஞர் காங்., பாண்டியனின் இண்டிகா கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கலாநிதி என்பவரின் மோட்டார் சைக்கிளை அருகில் இருந்த குளத்தில் தூக்கி வீசினர்.திருநள்ளார் தொகுதியில் காங்., மற்றும் என்.ஆர்.காங்., கட்சியினர் மோதிக்கொண்டதால் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. திருநள்ளார் நல்லம்பல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய 6 பேர் மற்றும் பெயர் தெரியாத கமலக்கண்ணன் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Source: Dinamalar
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக